யாழ்.பல்கலையில் இருந்தும் ஊர்தி பவனி ஆரம்பம்

யாழ்.பல்கலையில் இருந்தும் ஊர்தி பவனி ஆரம்பம்

திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை ஊர்தி பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வளாகத்திலிருந்து குறித்த ஊர்தி பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஊர்தி பயணிக்கவுள்ளதுடன், நாளை திங்கட்கிழமை காலை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தை சென்றடையவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )