ஹெரோயினுக்காக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறுமி

ஹெரோயினுக்காக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறுமி

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ஹெரோயினுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர் நேற்று மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டார்.

அவர் 8 மாதங்கள் கர்ப்பமாகவுள்ளார் என்றும் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் ஹெரோயினைப் பெறுவதற்காக பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாலேயே கர்ப்பம் தரித்தார் என்று மறுவாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிக்கின்றார்

சிறுமியின் தாயார் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அந்தச் சிறுமி அடையாளம் காணப்பட்டு, மறு வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )