நளினி தொடர்பில் தமிழக அரசு விடுத்த உத்தரவு

நளினி தொடர்பில் தமிழக அரசு விடுத்த உத்தரவு

நளினிக்கு ஐந்தாவது முறையாகவும் பிணை நீடிப்புக்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக அடைக்கப்பட்டிருந்த நளினிக்கு பிணை வழங்கக் கோரி அவரது தாயார் பத்மா கடந்த டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த கோரிக்கையை ஏற்று நளினிக்கு ஒரு மாதம் பிணை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழக அரசு உத்தரவு

இதன்படி கடந்த டிசம்பர் 27-ம் திகதி நளினி ஒரு மாதம் பிணையில் வெளியே வந்தார். இதையடுத்து தனக்கு வழங்கப்பட்ட பிணையை நீடிக்க கோரி நளினி மனு அளித்தார். நளினியின் மனுவை சிறை நிர்வாகம் அரசுக்கு அனுப்பி வைத்தது. அதன் பின்னர், நளினிக்கு இதுவரை 4 முறை பிணை நீடிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நாளை சிறைக்கு திரும்ப வேண்டிய நளினிக்கு, 5-வது முறையாக மேலும் 30 நாட்கள் பிணை நீடிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )