அணுசக்தி கடத்தலை தடுக்க இலங்கையுடன் உடன்பாடு; அமெரிக்கா கையெழுத்திடும்

அணுசக்தி கடத்தலை தடுக்க இலங்கையுடன் உடன்பாடு; அமெரிக்கா கையெழுத்திடும்

அணு மற்றும் பிற கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகமும் இலங்கை கடற்படையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட உள்ளன.

இலங்கையில் உள்ள பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளின் ஊடாக வழிநடத்தப்பட்ட இந்த உடன்படிக்கைக்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை சபை, இலங்கை அணுசக்தி சபை , வெளிவிவகார அமைச்சு மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களம் ஆகியன இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்த வரைவை முழுமையாக ஆராய்ந்துள்ளன.

மேலும், சட்டமா அதிபர் இதற்கான ஒப்பந்தத்தின் சட்ட அம்சங்களை அங்கீகரித்து தேவையான அனுமதியை வழங்கியுள்ளார்.

உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அணு மற்றும் பிற கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகமும் இலங்கை கடற்படையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )