
டுபாயில் ரணில் – மோடி சந்திப்பு; இருநாட்டு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் துபாயில் நடைபெற்ற COP 28 உச்சி மாநாட்டிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இருநாட்டு பொருளாதார விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளதுடன், இலங்கையில் இந்திய அரசாங்கம் முன்னெடுத்துவரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தெரிய வருகிறது.
CATEGORIES செய்திகள்

