
ஏச்சு,பேச்சு,திட்டு வாங்கியோரில் ராஜபக்ச குடும்பம் உலகில் முதலிடத்தில்
ராஜபக்ச குடும்பத்தை போன்று திட்டுவாங்கிய வேறு குடும்பம் உலகில் எந்த இடத்திலும் இல்லை என ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தில் பிறக்கவிருக்கும் குழந்தைகளும் ஏச்சு பேச்சுக்களை கேட்க நேரிட்டுள்ளது.
மேலும் 10 அடி முன்நோக்கி வைப்பதற்காவே ஒரு அடியை பின்நோக்கி வைத்தேன்.
எதிர்காலத்தில் நடக்கும் எந்த தேர்தலாக இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியை பெற தயாராக இருக்கின்றோம் எனவும் சஷீந்திர ராஜபக்ச கூறியுள்ளார்.

