பிரதமர் ரணிலின் நடத்தை வெட்கக்கேடானது; சுமந்திரன்

பிரதமர் ரணிலின் நடத்தை வெட்கக்கேடானது; சுமந்திரன்

எதிர்க்கட்சி சார்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய பிரதமர் ரணிலின் நடத்தை வெட்கக்கேடானது சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் பேசிய அவர், ஜனாதிபதியை யார் பாதுகாக்கிறார்கள், யார் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது நாட்டுக்கு தெரியும் என கூறினார்.

ஜனாதிபதிக்கு எதிரான இந்த பிரேரணை தயாரிக்கப்பட்ட போது, அப்போது எதிர்க்கட்சியில் இருந்த பிரதமர் அதற்கு ஆதரவு என கூறியதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பு ஒருகொள்கையோடும் பிரதமர் பதவி கிடைத்த பின்னர் இன்னொரு கொள்கையை கொண்டுள்ளார் என்றும் சுமந்திரன் கடுமையாக சாடினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )