நாட்டின் அரசியல்வாதிகளுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை!; தேரர் பகிரங்க குற்றச்சாட்டு

நாட்டின் அரசியல்வாதிகளுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை!; தேரர் பகிரங்க குற்றச்சாட்டு

இந்த நாட்டு அரசியல்வாதிகள் இந்த நாட்டிற்கு செய்த மாபெரும் அழிவை பார்க்கும் போது புலிகளின் தலைவர் பிரபாகரன் நாட்டிற்கு செய்த அழிவு பெரிதாக இல்லை என மிஹிந்தலை ரஜ மகா விகாரையின் வணக்கத்திற்குரிய வலஹங்குனவேவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டளவில் இலங்கை மக்கள் உணவின்றி கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என வெளிநாட்டு அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

இந்த மக்கள் உதவியை பெறலாம், ஆனால் சுனாமி பணத்திற்கு என்ன ஆனது, கோவிட் நிதிக்கு என்ன ஆனது? அவை மக்களுக்கு வழங்கப்படவில்லை.

வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கூட கடனாளியாக்கி, இந்த நாட்டு மக்களுக்கு இவ்வளவு இன்னல்களையும், அடக்குமுறைகளையும், சித்திரவதைகளையும் கொடுத்த கூட்டம் பூமியில் வேறெதுவும் இல்லை என்றார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )