துபாய் சென்றுள்ள கோட்டா நாடு திரும்புவாரா? இல்லையா?

துபாய் சென்றுள்ள கோட்டா நாடு திரும்புவாரா? இல்லையா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெற விண்ணப்பித்துள்ளதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் கடந்த ஜூலையில் நாட்டை விட்டு வெளியேறி சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நாடு திரும்பினார்.

பின்னர் அவர் சமீபத்தில் துபாய் நாட்டுக்குச் சென்றுள்ள நிலையில், குடியுரிமையை தொடர்பான அவரது கோரிக்கையை அமெரிக்கா இதுவரை பரிசீலிக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவிக்கையில்,

‘முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெறுவதற்கான எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.

கோட்டாபய ராஜபக்க்ஷவும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் துபாய் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இம்மாதம் 6 அல்லது 7 ஆம் திகதி அவர் நாடு திரும்புவார்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )