அமைச்சராவாரா விக்னேஸ்வரன்?

அமைச்சராவாரா விக்னேஸ்வரன்?

சிலருக்கு அமைச்சுப் பதவி பெரிய விடயமாக இருக்கிறது. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் அபிலாஷைகளை வென்றெடுப்பதையே நான் பெரிதாகக் கருதுகிறேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்.நல்லூரில் உள்ள அவரது வீட்டில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

நான் அமைச்சர் பதவியை ஏற்கப் போகிறேன் என எனது கட்சியை சேர்ந்த ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்தை நான் பெரிதாக எடுக்கவில்லை. சிலவேளை ஊடகங்களுக்கு முன்னால் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கலாம். அவ்வாறான அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டது.

கட்சி சார்ந்து எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் தொடர்பில் எனது கட்சி பிரதிநிதிகள் மற்றும் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கு இணைய வழியில் தகவல்களை தெரிவிப்பது எனது வழமை.

தற்போதைய அரசியல் சூழல் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நான் ஏற்கனவே சகலருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன் எனவும் விக்னேஸ்வரன் கூறினார்.

நான் முதலமைச்சராக பதவி வகித்த போது வாங்கிய சம்பளத்தை பார்க்கிலும் அரை மடங்கு அதிகமான சம்பளத்தை அமைச்சர்கள் பெற்றார்கள். அப்போது விரும்பியிருந்தால் அமைச்சராக பதவி வகித்து சலுகைகளை அனுபவித்திருக்கலாம் நான் அவ்வாறு செய்யவில்லை.

எனது கட்சியில் அங்கத்தவர்களுடனும் அல்லது அங்கத்துவ கட்சி தலைவர்களுடனும் வெளிப்படையாகவே பேசுகிறேன். சிலர் என் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள் .

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் அவர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான காத்திரமான முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதே எனது நிலைப்பாடாகும் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )