பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து வேட்டை

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து வேட்டை

தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தையும் புதிதாக கொண்டுவரப்பட உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தையும் முழுமையாக நீக்க கோரி தமிழ் மக்கள் சார்பில் மனுவொன்றினை கையளிக்கும் நோக்கோடு பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் செயற்பாடு வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா இழுப்பையடியில் இடம் பெற்ற குறித்த கையெழுத்து பெரும் செயற்பாட்டில் போராளிகள் நலம்புரிச் சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குறித்த மனுவானது எதிர்வரும் வாரங்களில் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )