
தையிட்டி விகாரை விவகாரத்திலும் அனுர அரசாங்கம் பொய்களைச் சொல்லி ஏமாற்றுகிறது- சுரேஷ் பிரேமச்சந்திரன்!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழில் இன்று ஊடக சந்திப்பை நடாத்தி உள்ளார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு மாகாண நிர்வாகத்தில் தலையீடு செய்வதாகவும் ஆளுநர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தமது எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
அதேபோன்று தையிட்டி விகாரை விவகாரத்திலும் அனுர அரசாங்கம் காலத்துக்கு காலம் பொய்களைச் சொல்லி ஏமாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

