
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்; வரவேற்றார் பாப்பரசர் லியோ
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு பாப்பரசர் லியோ வரவேற்றுள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக வட அமெரிக்காவை சேர்ந்த கார்டினல் ரொபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாப்பரசர் 14ஆம் லியோ என அழைக்கப்படுவார் என்று கார்டினல்கள் அறிவித்தனர்.
புதிய பாப்பரசராக பொறுப்பேற்று கொண்ட பின்னர் பொதுமக்கள் முன் உரையாற்றினார்.
குறித்த உரையிலேயே உலகம் முழுவதும் உள்ள அன்னையருக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
உக்ரைன் மற்றும் காஸாவில் அமைதி ஏற்பட வேண்டும் என வேண்டுகோளாக கேட்டு கொண்டார். உடனடி போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், பணய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார்.
பாப்பரசர் பிரான்சிஸ் கூறிய விடயங்களை எதிரொலிக்கும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு பாப்பரசர் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
உலகில், அமைதிக்கான அற்புதம் ஏற்படுவதற்கு கடவுள் ஆசி வழங்கும்படி வேண்டி கொள்கின்ற அதேவேளை பேச்சுவார்த்தைகள் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என அவர் நம்பிக்கையையும் வெளியிட்டார்.