வெளிநாட்டு,உள்நாட்டு சக்திகள் கோத்தாவின் அரசை சதியால் வீழ்த்தினர்!

வெளிநாட்டு,உள்நாட்டு சக்திகள் கோத்தாவின் அரசை சதியால் வீழ்த்தினர்!

2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டத்தின் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் வீழ்ந்ததாகவும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் நமது நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடையச் செய்யும் அளவிற்கு சூழ்ச்சி செய்ததாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும் தனது குடும்பத்தில் எவருக்கும் ஜனாதிபதி நிதி வழங்கப்படவில்லை எனவும் அந்த நிதியை யாரும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சதியின் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. அப்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் நமது நாட்டை பொருளாதாரம் வீழ்ச்சியடையச் செய்யும் அளவிற்கு சூழ்ச்சி செய்தன. அப்போது ரணிலை நியமித்தோம். ரணிலின் வேலைத்திட்டத்தையே இந்த அரசாங்கம் நடத்துகின்றது.

ஒரு அமைச்சர் அல்லது அரசியல் தொடர்புள்ள ஒருவர் ஜனாதிபதி நிதியில் இருந்து பணம் செலவழிப்பதாக கூறப்படுவதுடன், இதுவரை ஜனாதிபதி நிதியத்தால் உதவி செய்யப்பட்ட ஏனையவர்களின் பெயர் விபரங்களையும் வெளியிட வேண்டும். அதன்படி, நடந்ததை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பார்க்கலாம்.

அது இல்லாமல் ஒரேயடியாக இது குறித்து முடிவெடுக்க முடியாது. ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும், ஜனாதிபதி நிதியைப் பயன்படுத்துவது தொடர்பான நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும். அப்படி இல்லாமல் ஒரு சில தனி நபர் பெயர்களில் கையெழுத்து போட்டு முழு நிதியின் பயன்பாடும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று சொல்வது தவறு. எங்கள் குடும்பத்தில் யாருக்கும் இது வழங்கப்படவில்லை. நாங்களும் எடுப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட கட்சிக்கு பதிலாக பல வேட்பாளர்கள் கட்சி மாறியுள்ள நிலையில் புதிய வேட்புமனுக்களை கோருவது நல்லது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் படையின் கீழ் வேட்புமனு வழங்கிய பலர் தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதால் தற்போதுள்ள வேட்புமனுக்களின் கீழ் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு செல்வது பிரச்சினையாக உள்ளது.

இந்த நேரத்தில், ஒவ்வொரு கட்சியும் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அது நல்ல விடயம்தான். அனைத்து உள்ளூராட்சி மன்ற தேர்தல்களிலும் பொஹொட்டுவ சின்னத்தில் போட்டியிடுகின்றோம். அதேபோன்று மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட எதிர்பார்க்கின்றோம்.

குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் பல வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளனர். வேறு கட்சிகளில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்த பலர் கட்சி மாறியுள்ளனர். இதனால் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவது நல்ல விடயமெனவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )