
ஜே.வி.பி. காலமனிதப் புதை குழி விசாரணையை நிறுத்துவதற்காக ஆவணங்களை அழிக்க உத்தரவிட்ட கோட்டாபய; 30 வருடங்களில் 20 மனிதப் புதைக்குழிகள் ;
ஜே.வி.பி. கிளர்ச்சி காலத்தின் மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை நிறுத்துவதற்காக பொலிஸ் பதிவுகளை அழிக்குமாறு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டிருந்ததாக அறிக்கை யொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது
இரத்தக்களரியை ஏற்படுத்தியிருந்த மார்க்சிச கிளர்ச்சியின் (ஜே.வி.பி) உச்சக் கட்டத்தில் இராணுவ அதிகாரியாக முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணியாற்றிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்காக பொலிஸ் பதிவுகளை சிதைத்ததாக புதிய அறிக்கையொன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
கோத்தாபய ராஜபக்ச 1989 இல் மார்க்சிச கிளர்ச்சியின் உச்சக்கட்டத்தில் இராணுவ அதிகாரியாக இருந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை தடுக்கும் வகையில் பொலிஸ் பதிவுகளை சிதைத்ததாக கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்(ஐ.ரி.ஜே.பி.) இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட செயற்பாட்டாளர் குழுக்களின் அறிக்கை, கடந்த மூன்று தசாப்தங்களில் சுமார் 20 பாரிய புதைகுழிகளை தோண்டி எடுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானமனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெ னவும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களது உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும்
இன்னும் கண்டுபிடிக்கப்படாதபல்லாயிரக்கணக்கான எச்சங்கள் மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (ஐ.ரி.ஜே.பி.) இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட செயற்பாட்டாளர் குழுக்களின் அறிக்கை கூறுகிறது
அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களால் நிறுவப்பட்ட பல விசாரணை ஆணைக்குழுக்களில் எதுவுமே பாரிய புதைகுழிகள் பற்றி ஆராய கட்டளையிடப்படவில்லை. மாறாக, உண்மையை வெளிக்கொணரும் முயற்சிகள் தடைபட்டன என்று அந்த அறிக்கை சுட்டிகாட் டுகிறது
புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, நீதிபதிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர், குடும்பங்களின் வழக்கறிஞர்களுக்கு இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, உயிருள்ள சாட்சிகளைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை, பிரேதப் பரிசோதனை தரவுகள் சேகரிக்கப்படவில்லை மிகவும் அரிதான நிகழ்வுகளில்ஒன்றாக ஒருவர் தண்டிக்கப்பட்டார், பின்னர் அவர்கள் மன்னிக்கப்பட்டனர், என்று அந்த அறிக்கை கூறுகிறது
“இது அரசியல் விருப்பமின்மையின் கதை – போதுமான சட்ட கட்டமைப்பு, ஒரு ஒத்திசைவான கொள்கையின் பற்றாக்குறை மற்றும் போதுமான ஆதாரங்கள் இல்லாதமை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தீர்க்கப்படாத சோகத்தின் கதை; இழந்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்காமல் வாழவும் இறக்கவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், ”என்று அதுகூறுகிறது .
மனிதப் புதைகுழிகளை தோண்டியெடுப்பதில் ராஜபக்ச வின் வகிபாகம் அரசியல் தலையீட்டிற்கு ஒரு உதாரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு ள்ளது
2013 இல் இலங்கையின்மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஐந்து வருடங்களுக்கும் மேலான அனைத்துபொலிஸ் பதிவுகளையும் அழிக்குமாறு அப்போதைய அதிகாரம் வாய்ந்த பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ராஜபக்ச உத்தரவிட்டதாக அறிக்கை கூறுகிறது.
1989 இல் இடம்பெற்றிருந்த வன்முறை மார்க்சிஸ்ட் கிளர்ச்சியின் போது, ஒரு இராணுவ அதிகாரியாக விளங்கிய ராஜபக்ச, பிராந்தியத்தில் எதிர் கிளர்ச்சியில் ஈடுபட்ட காலத்திலிருந்தே இந்த மனிதப் புதைகுழிகள்தொடர்பாக இன்றுவரை சந்தேகிக்கப்படுகின்றன.
விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் ராஜபக்ச மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
25 வருட பிரிவினைவாத உள்நாட்டுப் போர் உட்பட மூன்று பெரிய ஆயுதக் கிளர்ச்சிகளை இலங்கை எதிர்கொண்டுள்ளது.
மோதல்களில் காணாமல்போனவர்களின் விவரங்களைக் கண்டறிய 2017 இல் உருவாக்கப்பட்ட அலுவலகம் பாதுகாப்புப் படைகளின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து 21,374 புகார்களைப் பெற்றுள்ளது.
மனிதப் புதைகுழிகள் மற்றும், அவற்றின் அடையாளம், பாதுகாத்தல் மற்றும் விசாரணை உட்பட தோண்டுதல்களை நிர்வகிப்பதற்கான விசேட சட்டங்கள் மற்றும் கொள்கைகளை இயற்றுமாறு அறிக்கை பரிந்துரைத்திருக்கிறது.
நாட்டில் தடயவியல் திறனை வலுப்படுத்தவும், தோண்டியெடுப்பின் விளைவாக வழக்குகள் பாரபட்சமற்ற முறையில் நடத்தப்படுவதை உறுதிசெய்ய ஒரு சுயாதீனமான பகிரங்க வழக்கு விசாரணையை உருவாக்கவும் மற்றும்ஏனைய சாத்தியமான மனித புதை குழிகளைக் கண்டறிய ஒரு திறமையான பிரிவை நிறுவவும் அறிக்கை பரிந்துரைத்திருக்கிறது.

