
மைத்திரி கூறியது பொய்
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை நான் அறிவேன் என்று பொய் கூறி .தேசிய பாதுகாப்பையும்,நாட்டு மக்களையும் கேலிக் கூத்தாக்கி,இல்லாத பிரச்சினையை தோற்றுவிக்கும் மைத்திரிபால சிறிசேனவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்எம்.பி.யுமான உதய கம்மன்பில வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்திய
அவர் மேலும் பேசுகையில்,
பாதிக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்தி அரசியல் இலாபம் தேட ஒரு தரப்பினர் முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.இந்த விவாதத்தில் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளின் பெயர், பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய தகவல்கள் குறிப்பிடப்படுவதை அவதானிக்க முடிகிறது.யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டின் புலனாய்வு பிரிவு பலவீனப்படுத்தப்பட்டது.நல்லாட்சி அரசாங்கம் அரசியல் நோக்கங்களுக்காக இராணுவத்தையும்,புலனாய்வு பிரிவையும் காட்டிக் கொடுத்தது.இதனை பயங்கரவாதி சஹ்ரான் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் .
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பற்றி பேசாமல் இருப்பது இந்த விவாதத்தில் பிரதான குறைப்பாடாக இருக்கும் .உண்மையான சூத்திரதாரியை தான் அறிவேன் என இவர் குறிப்பிட்டார்.இவரை கைது செய்யுமாறு வலியுறுத்தினோம்.ஆனால் கைது செய்யப்படவில்லை.பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் செயற்பாடுகள் பற்றி அறிந்தும் அதனை மறைப்பது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 7 வருட கால கடூழிய சிறைத்தண்டனைக்குரிய குற்றம்.
குண்டுத் தாக்குலை யார் நடத்தியது என்பதை தான் அறிவேன் எனக்குறிப்பிட்டுக் கொண்டு மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறிய விடயங்கள் முற்றிலும் பொய்யானது.இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு சி.ஐ.டி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.அவற்றை ஆராய்ந்த நீதவான் நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அதனை பாதுகாத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பையும்,நாட்டு மக்களையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் கருத்துக்களை குறிப்பிட்டுக் கொண்டு இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும் மைத்திரிபால சிறிசேன உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றார்.