
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படையினர் மீது குற்றச்சாட்டு
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் – இராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை சுமார் 338 விசைப்படகுகளில் மீன்பிடிக்கான அனுமதி பெற்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதியில் அவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது சில மீனவர்கள் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிக்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கடற்படையினரின் இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக பாரிய இழப்பீடு ஏற்படுவதாக இந்திய மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாக இலங்கை- இந்திய மீனவ பிரச்சினை தீர்வின்றி தொடர்ந்துக் கொண்டிருக்கின்றது.