யாழ்.பல்கலையில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி

யாழ்.பல்கலையில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் ஆரம்மானது.

இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மூன்று மாவீரர்களின் தயார் ஒருவர் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார்.

அதன் பின்னர் மாவீரர்கள் மற்றும் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )