உக்ரைனுக்கு போர்விமானங்களை வாங்க உதவிய பாகிஸ்தான் கோடீஸ்வரர்

உக்ரைனுக்கு போர்விமானங்களை வாங்க உதவிய பாகிஸ்தான் கோடீஸ்வரர்

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடரும் நிலையில், பாகிஸ்தானிய கோடீஸ்வரரும், உக்ரைனின் ஆங்கில செய்தித்தாள் நிறுவனமான Kyiv Post-ன் முன்னாள் உரிமையாளருமான முகமது ஜாஹூர் (Mohammad Zahoor) உக்ரைனுக்கு 2 போர் விமானங்களை வாங்க உதவி வழங்கியதாக கூறப்படுகிறது.

ஜஹூரின் மனைவியும் உக்ரேனிய பாடகியான கமாலியா ஜாஹூர் (Kamaliya Zahoor), தனது கணவரும் மற்ற செல்வந்த நண்பர்களும் ரஷ்யாவிற்கு எதிரான போராட்டத்தில் உக்ரைனுக்கு அமைதியாக உதவி செய்து வருவதாகக் கூறினார்.

உக்ரைனின் விமானப்படைக்கு இரண்டு ஜெட் விமானங்களை வாங்குவதற்கு தனது கணவர் உதவியதாக அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )