தையிட்டியில் மீண்டும் போராட்டம்

தையிட்டியில் மீண்டும் போராட்டம்

தையிட்டி விகாரைக்கு அண்மையில் மீண்டும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

தையிட்டியில் மீண்டும் போராட்டம் முன்னெடுப்பதற்கு, பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்த நிலையிலேயே இந்தப் போராட்டம் நேற்று மாலை ஆரம்பமாகியுள்ளது.

இன்று 3 ஆம் திகதி போயா தினம் என்பதால் இந்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் போராட்டமானது இன்றையதினமும் தொடரவுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )