நடுநிலையில் மகிந்த இல்லை

நடுநிலையில் மகிந்த இல்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியலில் தொடர்ந்தும் நடுநிலை பாதைக்கு தலைமைத்துவம் வழங்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குருவிட்ட பகுதியில் இடம்பெற்ற உத்தர லங்கா சபாகயவின் சம்மேளனத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தற்போது ரணில் விக்ரமசிங்கவின் பக்கத்தில் இருக்கின்றார்.எனவே, தொடந்தும் நடுநிலைப் பாதையில் கொடியைத் தூக்கிக்கொண்டு பயணிக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு முடியாது.

ஏகாதிபத்தியவாதிகளின் அழுத்தத்திற்கும், அவர்களுக்கு எதிராக உருவாகியுள்ள ஆசியாவின் பலத்திற்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே, நடுநிலைப் பாதையில் பயணிப்பவர்கள், எங்கு செல்வது என்று தீர்மானம் எடுக்க வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )