இனப்பிரச்சினை தீர்வு; ரணில் – தமிழ் தரப்பு மீண்டும் பேச்சு – அடுத்த வாரம் ஆரம்பம்!

இனப்பிரச்சினை தீர்வு; ரணில் – தமிழ் தரப்பு மீண்டும் பேச்சு – அடுத்த வாரம் ஆரம்பம்!

இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் அடுத்த வாரத்தில் 3 நாட்கள் தொடர் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.

அடுத்த வாரம் 11, 12, 13ஆம் திகதிகளில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து பேச்சுக்கான அழைப்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )