நானுஓய– ரதெல்ல விபத்து தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

நானுஓய– ரதெல்ல விபத்து தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹற்றன் பகுதியை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், வான் சாரதியும் முச்சக்கரவண்டி சாரதியுமே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 13 வயது சிறுவன், 26 மற்றும் 27 வயதுடைய 3 ஆண்கள், 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 43 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பேரூந்தை செலுத்திய சாரதியின் கவனமின்மையே இந்த விபத்துக்கு காரணமெவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )