
மகிந்த அணியில் 15 கட்சிகள்; எவராலும் சவால் விட முடியாது
எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எவராலும் சவால் விட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சுமார் 15 கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் எதிர்க்கட்சிகளிடம் பேச்சுக்கள் இருந்த போதும் அவர்களிடம் நாட்டிற்கான வேலைத்திட்டம் இல்லை அல்லது மக்களின் ஆதரவு இல்லை என்பது தெளிவாகிறது.
கட்சியின் சித்தாந்தங்கள் கூறுகின்ற போதிலும், 1977 ஆம் ஆண்டு முதல் நாட்டை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளும் பொருளாதாரத்தை தாராளமயமாக்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பண்டார மேலும் தெரிவித்தார்.
காலங்காலமாக, முன்னாள் எதிரிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதை நாடு காணக்கூடியதாக உள்ளதாகவும், எனவே எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னால் அது வேறுவிதமாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

