
யாழில் அதிகரிக்கும் போதைப் பொருள் பாவனை; யாழ் சிறைச்சாலையில் 854 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில்
யாழ் சிறைச்சாலையில் இவ் வருடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வரை 854 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் கடந்த வருடமான 2021 ஐ விட இரட்டிப்பு மடங்காக அதிகரித்துள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி ஏற்பாடு செய்யத போதைப் பொருள் பாவனையை தடுத்தல் மற்றும் சமூகத்தை விழிப்பூட்டல் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட அவசர கலந்துரையாடல் இவ்வாறான தகவல் வெளியானது.
இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து செல்கின்றமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் கஞ்சா, ஹெரோயின், ஜஸ் போதைப்பொருள் குற்றச்சாட்டில் 2021 ஆம் ஆண்டு 485 பேர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் இவ் வருடம் 2022 ஆண்டு நேற்று செவ்வாய்க்கிழமை வரை 854 பேர் நீதிமன்றத்தால் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு 10 பெண்கள்களும் 2022 இவ்வருடம் ஒன்றரை மாத குழந்தையுடன் 13 பெண்கள் சிறைச்சாலைக்கு வந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது 5 பெண்கள் ஹெரோயின் பாவித்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தால் சட்ட வைத்திய அதிகாரியிடம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
நிலம் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டு உள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் பல பாடசாலைகள் அதனை வெளிக்கொண்டு வரத் தயங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி யார் மாவட்டத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்து சென்றள்ளமை கவலை அளிப்பதாகவும் இனியும் தடுக்காவிட்டால் எதிர்கால சந்ததியினரை விளக்க வேண்டிய துப்பாக்கிய நிலை ஏற்படும் .
போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எமது சமூகத்தில் இருக்கின்ற நிலையில் இனியும் நாம் கௌரவம் பார்ப்போமானால் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களால் ஏனையவர்களும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் ஏற்படும்.
போதப்பொருள் பாவனையை தடுப்பதற்கும் போதைப்பொருளுக்கு அடிமையானவரை மீட்டெடுப்பது தொடர்பில் முறையான வேலை திட்டங்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஆகவே பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், பிரதேச செயல அதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் அனைவரும் முன் வரவேண்டும் என தெரிவிததுடன் அடுத்த கட்ட கலந்துரையாடலில் சாதகமான விடையங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக தெரிவித்தார்

