
ஜனாதிபதி தலைமையில் ஐ.எம்.எப்.உடன் பேச்சு
இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான(ஐ.எம்.எப்.) ஆரம்ப கட்ட கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இலங்கை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியின் தற்போதைய நிலைமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும் நாளை 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த கலந்துரையாடலில் மீண்டுமொரு கலந்துரையாடலை நடாத்துவது எனவும் எதிர்காலத்தில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் தொழிநுட்ப விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் பீட்டர் புரூபர், பிரதித் தலைவர் ஒசைரோ கொசைகோ, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி டுபாகன்ஸ் மற்றும் ஜனாதிபதியின் தலைமைச் செயலாளரும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க. , ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர்.