அசாத் மௌலானாவை சந்தித்ததே இல்லை! கோட்டாபய ராஜபக்ச பகிரங்கம்
அசாத் மௌலானவை ஒரு காலத்திலும் தான் சந்தித்தது இல்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் 250 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆனதுமே ஜனாதிபதி செயலாளரை நியமிக்காமல் குற்றப்புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய சானி அபய சேகரவை இடமாற்றம் செய்தார்.
அநேகமானோர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர்.தற்போதும் கொடுமைகளை அனுபவித்து வாழ்கின்றனர்.

