ஈழத் தமிழர்களின் நம்பிக்கையாக மாறுவாரா விஜய்.. எதிர்பார்ப்பில் புலம்பெயர் தேசம்!

ஈழத் தமிழர்களின் நம்பிக்கையாக மாறுவாரா விஜய்.. எதிர்பார்ப்பில் புலம்பெயர் தேசம்!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள முதலமைச்சர் விஜய், ஈழத் தமிழர் விவகாரத்தில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார் என்பதே உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களின் தற்போதைய பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.

திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு கால அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்யின் கைகளில், தொப்புள்கொடி உறவுகளின் எதிர்கால நம்பிக்கையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஈழப்போர் முடிவுக்கு வந்த பிறகு, தமிழக அரசியல் தலைவர்கள் வெறும் தீர்மானங்களோடும், போராட்டங்களோடும் நின்றுவிட்டனர் என்ற அதிருப்தி ஈழத்தமிழர்களிடையே உண்டு.

இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள விஜய்க்கு, ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு, தாயகம் திரும்பியவர்களின் குடியுரிமை மற்றும் ஈழ அகதிகள் முகாம்களின் மேம்பாடு போன்ற முக்கிய சவால்கள் காத்திருக்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )