தமிழர் போராட்டத்தை முடிவடையாததாக கருதுமாறு ஐ.நா.விடம் புலம்பெயர் தமிழ் குழுக்கள் வலியுறுத்தல்

தமிழர் போராட்டத்தை முடிவடையாததாக கருதுமாறு ஐ.நா.விடம் புலம்பெயர் தமிழ் குழுக்கள் வலியுறுத்தல்

ஈழத் தமிழர்களின் போராட்டத்தை தீர்வுகாணப்படாத குடியேற்ற விலக்க விவகாரமாக அங்கீகரிக்குமாறு அமெரிக்க தமிழ் அமைப்புகள் ஐ. நா. மனித உரிமைகள் பே வையிடம் (UNHRC) கோரிக்கை விடுத்துள்ளதுடன் , பல தசாப்தகால செயலற்ற தன்மையானது இனப்படுகொலைக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது டன் உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளன .

உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு2025ஆகஸ்ட் 17,திகதியிடப்பட்டு கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில்,, வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை தமிழ் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு மற்றும் உலகத் தமிழ் அமைப்பு உள்ளிட்ட ஐந்து முன்னணி தமிழ் அமெரிக்க குழுக்கள், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை “தோல்வியடைந்த தீர்மானங்களுக்கு” அப்பால் நகர்ந்து கொள்கை ரீதியானதொரு புதிய அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளன .

2009 முதல் ஐ. நா. மனித உரிமைகள்பேரவையின் தீர்மானங்களை இலங்கை “தொடர்ந்து நிராகரிப்பதை” இந்த அமைப்புகள் கண்டித்திருப்பதுடன் , மேலும் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்குப் பிறகு பதினாறு ஆண்டுகளில் பேரவையால் எந்தவொரு உறுதியான பொறுப்புக்கூறலையும் வழங்க முடியாமலிருப்பது குறித்து “கடும் ஏமாற்றத்தை” வெளிப்படுத்தியுள்ளன . ஐ.நா. நடவடிக்கை எடுக்கத் தவறியமையானது , “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செயற் பாட்டில் தமிழ் சமூகத்தின் நம்பிக்கையைக் கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது” என்று அவை குறிப்பிட்டுள்ளன.

தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் செம்மணிப் புதைகுழிகள் அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி தளத்தின் ஒரு பகுதியான சிந்துபதியில் 140க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி, சர்வதேச தடயவியல் விசாரணைகளுக்கான அவசரத் தேவையையை குழுக்கள் வலியுறுத்தியுள்ளன .

இலங்கை இராணுவ கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் சாட்சியத்தின் மூலம் இந்த இடம் முதன்முதலில் 1998 இல் அடையாளம் காணப்பட்டது, அவர் இராணுவ உத்தரவின் பேரில் 300–400 உடல்கள் அங்கு புதைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். 1999 இல் 15 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டாலும், சர்வதேச மன்னிப்புச் சபையின் அழைப்புகள் இருந்தபோதிலும் மேலும் விசாரணைகள் நிறுத்தப்பட்டன.

“இந்த ஆண்டு கட்டுமானக் குழுவினரால் இந்த இடம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது, சுயாதீனமான சர்வதேச தடயவியல் விசாரணைகளுக்கான அவசரத் தேவையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது,” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

காலனித்துவ விலக்கு , நல்லிணக்கம் அல்ல மேலும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான மைய அரசியல் பிரச்சினை ஐ. நா. மனிதஉரிமைகள்பேரவையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக அமைப்புகள் தெரிவித்தன.

ஈழத் தமிழர் பிரச்சினையை ஐ.நா. பொதுச் சபையின் விசேட அரசியல் மற்றும் காலனித்துவ நீக்கத்திற்கான நான்காவது குழுவின் ஒரு விட யமாகக் கருத வேண்டும் என்று அவர்கள் ஐ.நா.வை வலியுறுத்யுள்ளனர் , 1948 இல் இலங்கையில் நடந்த சுதந்திர செயல்முறை “முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனித்துவ நீக்கம்” என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“பிரிட்டிஷார் 1948 இல் சுதந்திரம் வழங்கியபோது, அவர்கள் தமிழர்களிடமிருந்து எந்த ஆணையையும் கோராமல் சிங்களவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தனர், தமிழ் தேசத்திற்கான சுயநிர்ணயக் கொள்கையை நிலைநிறுத்தத் தவறிய ஒரு முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனித்துவ நீக்க செயல்முறையை மேற்கொண்டனர்,” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச நீதிமன்றத்தின் முன் உள்ள மொரிஷியஸ் வழக்கிற்கு இணையாக, இந்த வரலாற்று அநீதியை சரிசெய்ய ஐ.நா.வுக்கு அதிகாரமும் பொறுப்பும் இருப்பதாகஉம் குழுக்கள் வாதிட்டிருக்கின்றன .. .தீர்ப்பாயம் மற்றும்சர்வஜன வாக்கெடுப்புக்கான அழைப்பு
இந்தக் கடிதமானது மனித உரிமைகள்பேரவையின் உறுப்பு நாடுகளுக்கான நான்கு அம்ச செயல் திட்டத்தை வகுத்துள்ளது:

1. தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து சந்தேகிக்கப்படும் புதைகுழிகள் மீதான சர்வதேச தடயவியல் விசாரணைகளை ஆதரித்தல்.

2. ஐ.நா. பாதுகாப்பு சபை மூலம் இலங்கைக்கான விசேட தீர்ப்பாயத்தை நிறுவுவதற்கு பரிந்துரைத்தல்.

3. தமிழர் தாயகத்தை ஐ.நா. நான்காவது குழுவிடம் சுயநிர்ணய உரிமையற்ற பிரதேசமாகப் பரிந்துரைத்தல்.

4. ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் மற்றும் ஐ.நா.வின் கண்காணிப்பில் சுதந்திர மானசர்வஜன வாக்கெடுப்பை நடத்த உதவுதல்.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ. நா. மனிதஉரிமைகள்பேரவையின் அடுத்த கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்த மேன் முறையீடு வருகிறது,

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )