கடல் மார்க்கமாக நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கும் கோட்டா

கடல் மார்க்கமாக நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கும் கோட்டா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடல் மார்க்கமாக நாட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பதாக சர்வதேச செய்தி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமான நிலையத்தினூடாக நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறான மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ளதுடன், அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது நேரடியாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனைடுத்து, ஜனாதிபதியை உடனடியாக இராஜினாமா செய்யுமாறும் நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளிப்பதாக ஜனாதிபதி அறிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )