
அநுராதபுரத்திற்கு சென்றார் இந்தியப் பிரதமர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபடுவதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது இந்தியப் பிரதமர், அட்டமஸ்தானாதிபதி ஷ்யாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து பிரிவின் பிரதம பீடாதிபதி அதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
இதற்கிடையில், தனது X கணக்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரம் நகருக்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
எனது நண்பர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுடன் அநுராதபுரத்தில் என பதிவிட்டிருந்தார்.
CATEGORIES செய்திகள்