ஜனாதிபதி மாளிகைக்குள் துப்பாக்கிச் சூடு; 23 பேர் காயம்

ஜனாதிபதி மாளிகைக்குள் துப்பாக்கிச் சூடு; 23 பேர் காயம்

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததையடுத்து கோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மாளிகைக்குள் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை காயமடைந்த இரண்டு பொலிஸார் உட்பட 23 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை அருகில் இருந்த தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இரண்டு வாகனங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்.

அதனை பயன்படுத்தி பாதுகாப்புத் தரப்பினர் மீது போராட்டக்காரர்கள் தண்ணீர் பீச்சியடித்து பொலிஸாரை அங்கிருந்து கலைப்பதற்கு முயன்றுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )