யாழில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் பலியான பெண்!

யாழில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் பலியான பெண்!

யாழில் வயோதிபப் பெண் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் நெல்லியடி வதிரி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன் போதே தாக்குதலுக்கு இலக்காகி 76 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின் போது தலையில் தாக்கப்பட்ட நிலையில் நேற்று முற்பகல் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய சம்பவம் தொடர்பில் இருவர் நெல்லியடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நெல்லியடி காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )