
ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு எவரும் வெளியேற மாட்டோம்
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து யாரும் வெளியேற மாட்டோம். பொய்யான பிரசாரங்கள் மூலம் 15, 20 பேர் வெளியேறுவார்கள் என்று சொன்னாலும், ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு யாரும் வெளியேறப்போவதில்லை . மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாட், இராதாகிருஷ்ணன் போன்றே நானும் சஜித் பிரேமதாசவுடனே இருக்கின்றேன் என பழனி திகாம்பரம் எம்.பி.தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அடுத்த தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றி பெறுவார். மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தி சொல்லும் அளவுக்கு அவ்வாறு சவால் எதுவும் இல்லை. சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் சஜித் பிரேமதாசவுடனே உள்ளன.
மே தின கூட்டங்களுக்கு வருபவர்களை வைத்து தேர்தல் முடிவுகளை கணிப்பிட முடியாது. மே தினக் கூட்டங்களுக்கு சமூகமளிக்காத ஏராளமானோர் இருக்கின்றனர். எனவே, மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை வைத்து தேர்தலில் வெற்றியாளரை தீர்மானிக்க முடியாது.
ரணில் விக்கிரமசிங்க போன்ற திருடர்களை பாதுகாக்க விரும்பாததாலயே” சஜித் பிரேமதாச நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. திருடர்களை இல்லாதொழிக்கவே சஜித் பிரேமதாச விரும்புகிறார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1700 என ஜனாதிபதியும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் வர்த்தமானியில் வெளியிட்டிருந்த போதும், மறுநாள் கம்பனிகள் அவ்வாறு ஊதியத் தொகை கொடுக்க முடியாது என்று கூறியபோது, ஊதியத் தொகை தீர்மானித்த பிரகாரமே கொடுக்க வேண்டும் என்று ஊடகங்கள் மூலம் கூறியும், இதுவரை கொடுக்கப்படவில்லை. வாக்குகளைப் பெறுவதற்காகச் சொல்லப்பட்ட கதையே இது . இது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் செயலாகும்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து யாரும் வெளியேற மாட்டோம். பொய்யான பிரசாரங்கள் மூலம் 15, 20 பேர் வெளியேறுவார்கள் என்று சொன்னாலும், ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு யாரும் வெளியேறப்போவதில்லை . மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாட், இராதாகிருஷ்ணன் போன்றே நானும் சஜித் பிரேமதாசவுடனே இருக்கின்றேன் .இது தேர்தல் காலம் என்பதனால் பல்வேறு பொய்யான பிர சாரங்களைக் கண்டு மக்களை ஏமாறக்கூடாது என்றார்

