
யாழில் இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு மீனவ சங்கங்கள் இணைந்து யாழ். இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் தூதுவராலயம் முன்பாக பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் காலை 11 மணியளவில் மீனவர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்ட பேரணியாக தூதரகத்தை நோக்கிச் சென்று அதனை முற்றுகையிட முயன்ற போது தூதரகத்திற்கு அருகாமையில் போராட்டகாரர்கள் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள் 7 பேர் தூதரகத்திற்கு சென்று தூதுவரைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதன் போது போராட்டக்காரர்கள் இந்திய, இலங்கை அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இங்கு அவர்கள் இந்திய இழுவைப் படகு உரிமையாளர்களே எங்களையும் வாழ விடுங்கள் , கடற்தொழிலாளர்களை பிரித்தாழும் தந்திரத்தை செய்யாதே, தொப்புள் கொடி உறவுகளை பிரிக்காதே, இந்திய அரசே இலங்கையின் வடபகுதி மீனவர்களை திரும்பிப்பார், அத்துமீறும் இந்திய மீனவரின் அராஜகம் அடியோடு ஒழிய வேண்டும், சட்டவிரோத அத்துமீறலை தடுத்து நிறுத்து, வடக்கு மீனவர்களின் வளங்களை சூறையாடாதே என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது போராட்டகாரர்களை இடைமறித்த பொலிஸாருடனும் போராட்டக்காரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
இப் போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பெருமளவு மீனவர்கள் வருகை தந்து கலந்து கொண்டிருந்த அதே நேரத்தில் பெரு