இந்தியா நுழையாமல் இருந்திருந்தால் புலிகளின் பலம் அதிகரித்திருக்கும்

இந்தியா நுழையாமல் இருந்திருந்தால் புலிகளின் பலம் அதிகரித்திருக்கும்

இலங்கை -இந்திய ஒப்பந்தம் மூலம் இந்தியா உள்ளே நுழையாமல் இருந்திருந்தால், புலிகளின் பலம் அதிகரித்து, இலங்கைக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

மாகாண சபையின் அதிகாரம் சற்று அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த வேலைத்திட்டம் நாட்டுக்கு மிகவும் நன்மை பயக்கும்

13ஐ அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி கோரிய ஆதரவை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளேன்.

மாகாண சபையின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும். அந்த அதிகாரத்தை மத்திய அரசாங்கம் எங்களிடம் இருந்து பறித்துள்ளது.

திருடப்பட்ட அனைத்து உரிமைகளையும் நாங்கள் திரும்பப் பெற விரும்புகிறோம்.

13ஆவது திருத்தத்தின் காரணமாக சிங்கள மக்கள் தவறான அணுகுமுறைக்குள் நுழைந்துள்ளனர். இந்த 13ஆவது திருத்தத்தை இந்தியா பலவந்தமாக இலங்கைக்கு வழங்கியது என்று அவர்கள் கூறுகின்றனர் . அது தவறு, வற்புறுத்தல் இல்லை. அப்போது, இந்தியா உள்ளே நுழையாமல் இருந்திருந்தால், புலிகளின் பலம் அதிகரித்து, இலங்கைக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.

எப்படியாவது இந்த 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய நடத்தை நாட்டுக்கு நல்லது.எனவே, அனைவரும் அதனை ஏற்று ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )