
வேட்பாளர்களை கொழும்புக்கு அழைத்து பாரிய போராட்டம்; ஜே.வி.பி தீர்மானம்
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமது கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் கொழும்புக்கு அழைத்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.இதன்படி எதிர்வரும் 8 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் சென்று போராட்டத்தில் ஈடுபடுவர் என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
மார்ச் 9 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடக்கின்ற போதும், இன்னும் தேர்தல் நடத்தப்படாதிருப்பதாகவும், இதனால் தேர்தலை தாமதிக்காது நடத்துமாறு வலியுறுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 8 ஆம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் தேர்தலுக்கான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், இறுதியில் கொழும்பில் பாரிய போராட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

