இரத்தினபுரி வெள்ளந்துரை தோட்ட குடியிருப்பு உடைக்கப்பட்டமையால் பரபரப்பு

இரத்தினபுரி வெள்ளந்துரை தோட்ட குடியிருப்பு உடைக்கப்பட்டமையால் பரபரப்பு

இரத்தினபுரி கஹவத்தை பெருந்தோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளந்துரை பகுதியிலுள்ள தொழிலாளியொருவரின் குடியிருப்பு தோட்ட நிர்வாகத்தினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னரே குறித்த குடியிருப்பு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உடையிலுள்ள விசமிகள் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தொடர்ந்தும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் தொடர்ந்தும் உடைக்கப்பட்டு வருவதற்கும் தோட்ட நிர்வாகத்தின் அடக்கு முறைகள் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர்; ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )