இந்தியாவின் பாதுகாப்பு கவனமாக இருக்க வேண்டும்

இந்தியாவின் பாதுகாப்பு கவனமாக இருக்க வேண்டும்

ஹம்பாந்தோட்டை துறைமுகம், போர் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக சீனாவினால் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்துள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்க வேண்டும் எனவும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிகவும் நட்பு ரீதியான உறவு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விமான சேவைகள் இடம்பெறுவதுடன் தற்போது கப்பல் போக்குவரத்தும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன் இலங்கை தமது எரிசக்தி துறையை கட்டியெழுப்புவதற்கு இந்தியா உதவுகிறது எனவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )