ஜூலை 20 நாடாளுமன்றில் புதிய ஜனாதிபதி தேர்வு

ஜூலை 20 நாடாளுமன்றில் புதிய ஜனாதிபதி தேர்வு

ஜூலை 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என இலங்கை நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதி ஒருவரை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பை எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 19ம் திகதி ஜனாதிபதிக்கான வேட்பு மனு கோரப்படவுள்ளதுடன், புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பை அடுத்த தினமே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பசில் ராஜபக்ச ரணிலுக்கு வாக்களிக்க பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை ஏற்பாடு செய்கிறார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )