இலங்கையில் கோவிட் – 19 தொற்றினால் இருவர் உயிரிழப்பு

இலங்கையில் கோவிட் – 19 தொற்றினால் இருவர் உயிரிழப்பு

நாடு முழுவதும் பரவி வரும் கோவிட் – 19 நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர இதனை தெரிவித்துள்ளார்.

“வைராலஜி நிறுவனத்தின்படி, இலங்கையில் சுவாச நோயாளிகளில் ஒன்பது வீதம் முதல் 13 வீதம் வரை தற்போது புதிய கோவிட் – 19 வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோவிட் தொற்று மிகக் குறைந்த தீவிர நிலையில் உள்ளது. தீங்கு விளைவிக்கும் விளைவுகள் மிகக் குறைவாகவே உள்ளது.

எனினும், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு, இது தீவிரமாக இருக்கலாம். அத்தகையவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். இலங்கையில் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்த இருவரும் பாதிக்கப்பட்டவர்கள். அதைத் தவிர, தற்போது எங்களுக்கு ஒரு தீவிரமான நிலை இல்லாததால் தேவையில்லாமல் அச்சமடையத் தேவையில்லை.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )