நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக பந்துல குணவர்தன முறைப்பாடு!

நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக பந்துல குணவர்தன முறைப்பாடு!

அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு எவ்வித அறிவித்தலும் வழங்காமல் ஹோமாகம பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாமல் ராஜபக்ஷ ஒழுக்கத்தை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் இது போன்ற விஷயங்களில் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது

மேலும் இந்த தொகுதிக் குழுக் கூட்டத்தில் ஹோமாகம உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட சிறு குழுவினர் பங்கேற்றுள்ளதாகவும், நாமல் ராஜபக்ஷ, காமினி லோககே, திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோர் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு எடுக்கும் அரசியல் தீர்மானத்தை இன்று பிற்பகல் அறிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )